world

img

இந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலி

இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 27 பேர் பலியாகினர். 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியா  சுமேடாங் மாவட்டத்தில் 65 அடி பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 39 பேர் பலத்த காயத்துடன் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது
ஜாவா தீவில் உள்ள சுபாங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தசிக்மலயா மாவட்டத்திற்கு  சுற்றுலா சென்றுள்ளனர்.
பின்னர் திரும்பி வரும் போது சுமேடாங் மாவட்டத்தில் சரிவான பகுதியில் வரும்  பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 65 அடி பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து வந்த தேசிய மீட்பு படையினர்மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியர்வகளை மீட்டனர். இதில் 27 பேர் உயிரிழந்த நிலையில் 39 பேர் பலத்த காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

;