world

img

நிலநடுக்கம் 5 பேர் பலி....

ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ளமனாடோ நகரில் சனிக்கிழமையன்று 68 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. இது ரிக்டர்அளவில் 6.1 ஆக பதிவானது.ஆனால் சுனாமி எச்சரிக்கைஎதுவும் வெளியிடப்படவில்லை.நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. தஜிகிஸ்தான் நாட்டில் ரஷீத் நகரின் தெற்கு கிழக்குபகுதியில் 27 கிலோமீட்டர்தொலைவில் சனிக்கிழமையன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.நிலநடுக்கத்தால் ஏற்பட்டகட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தஜிகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

;