world

ஒருமித்த கருத்தில் நிற்கிறோம்

மாஸ்கோ, பிப்.11 - ஐரோப்பியக் கண்டத்தின் பாது காப்பு குறித்து ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடினும், பிரான்சின் ஜனா திபதி இம்மானுவேல் மக்ரோனும் நேரில் சந்தித்து உரையாடியிருக் கிறார்கள். உக்ரைனை மையமாக வைத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கூட்டா ளிகள் படைகளையும், ஆயுதங்களை யும் குவித்து வரும் வேளையில், அவர்களிடமிருந்து மாறுபட்ட நிலை பாட்டை பிரான்ஸ் எடுத்துள்ளது. நிலை மையை சரி செய்யும் நோக்கத்தில் ரஷ்யப் பயணத்தை பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்பு, அதிலும் குறிப்பாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழல் ஆகியவை பற்றி ரஷ்ய ஜனாதி பதி விளாடிமீர் புடினுடன் பேசியிருக் கிறார். இந்த உரையாடலின்போது, “நான் மீண்டும் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்த தற்போதைய நிகழ்வுகள் பற்றி நாங்கள் அக்க றையுடன் இருக்கிறோம். கொள்கை ரீதியான தீர்வுகளை இந்தப் பகுதி யில் ஏற்படுத்தும் முயற்சியில் பிரான்ஸ் தீவிரமான பங்களிப்பைச் செலுத்து கிறது. இதற்காக நான் பிரான்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று மக்ரோனிடம் புடின் கூறி யிருக்கிறார். மேலும் பேசிய அவர், “ரஷ்யா  மற்றும் பிரான்ஸ் உறவுகளுக்கு இது முக்கியமான நாளாகும். முப்பது  ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதியில்தான் சிறப்பு உறவுகளுக் கான உடன்பாடு கையெழுத்தானது. தற்போது நாம் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கான அடித்த ளத்தை அந்த ஆவணம்தான் அமைத்துக் கொடுத்தது. பல்வேறு விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்தை நாம் கொண்டிருப்பதற்கு இந்த ஆவணம்தான் காரணமாக இருந் திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக் கிறார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரோனும் தங்கள் தரப்புக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக் கிறார். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய  நாடுகளின் கருத்தை பிரான்ஸ் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பிரான்சின் இந்த நிலைபாட்டை வர வேற்றுள்ள ரஷ்யாவின் புடின், “தற் போதுள்ள நிலைமை குறித்து நீங்கள் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அது குறித்து நேரில் விவாதிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.