world

img

உளவு பார்க்க புதிய மென்பொருளை வாங்கியது ஒன்றிய அரசு!

எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், அரசை விமர்சிப்பவர்களை உளவு பார்க்க புதிய மென்பொருள்களை ஒன்றிய அரசு வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
  எற்கனவே பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாங்கிய இஸ்ரேலில் இருந்துதான் புதிய உளவு மென்பொருளும் வாங்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ள காக்னைட் என்ற மென்பொருள் பெகாசஸுக்கு போட்டியான உளவு மென்பொருளாகும்.
செய்தியாளர்கள், எதிர்க்கட்சியினரின் கணினிகள், போன்களுக்குள் ஊடுருவி உளவு பார்க்க காக்னைட் மென்பொருள் பயன்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு உளவு முகமையின் உள் அமைப்புதான் மென்பொருளை வாங்கி உள்ளது. சிக்னல் உளவு இயக்குனரகம் தான் காக்னைட் என்ற உளவு மென்பொருளை வாங்கி உள்ளது.
2023 ஜனவரியில் கூட மேலும் ஒரு உளவு மென்பொருளை காக்னைட் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தற்போது வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது