உக்ரைன்- ரஷ்யா போர் அந்த இரு தேசங்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; நேட்டோ நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளன. போரும் முடியாமல் நீடிக்கிறது. எனவே இந்த போர் உலக அளவிலான ராணுவ முரண்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது என சீனாவின் அரசியல் ஆய்வாளர் வேங் வென் ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேர்வதற்கான முதல் நிலை நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தெரி வித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் புகழ்பெற்ற பத்திரிக்கையான “வோக்” எனும் இதழ் உக்ரைனின் ஸ்டீபன் பண்டேரா வை வரலாற்றின் புகழ் பெற்ற முக்கிய மனிதர்களில் ஒருவர் என வர்ணித்துள் ளது. ஆனால் ஸ்டீபன் பண்டேரா இரண்டாம் உலகப்போரின் பொழுது ஹிட்லர் படைகளை உக்ரைனுக்கு வர வழைத்து ஆதரித்தது மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் போலந்து மக்களை கொன்று குவித்த தில் முக்கிய பங்காற்றியவர். இன்றைய நாஜிக்களுக்கு கடவுள் போன்றவர் இவர்!
உக்ரைன் - ரஷ்யா போர் ஐந்தில் ஒரு பங்கு உலக மக்களை - அதாவது 170 கோடி பேரை வறுமை மற்றும் பட்டினி யில் தள்ளும் அபாயத்தை உருவாக்கும் ஆபத்து கொண்டுள்ளது என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டால் ஜெர்மனியில் தொழில் உற்பத்தி பாதிப்பு/ பொருளா தாரம் சரிவு/ வேலையின்மை ஆகியவை ஏற்படும் என ஜெர்மானிய முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரித்துள்ளன.
போதுமான ஆயுதங்களை தரத் தயங்கும் ஜெர்மனியை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். உடனடியாக ஜெர்மனி ஆயுதங்களை தரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
டாலர் மற்றும் யூரோவுக்கு எதிராக ரஷ்ய நாணயமான ரூபிள் தொடர்ந்து வலுப் பெற்று வருகிறது. போருக்கு முந்தைய மதிப்பை மீட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய புடின் ரஷ்யாவுக்கு எதி ரான மேற்கத்திய நாடுகளின் பொருளா தார நடவடிக்கைகள் தோற்றுவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
50 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்தாலும் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பப் பட்டு வருகிறது.
உக்ரைனை ஆதரிக்க ரஷ்யாவை வெறுப்பது மோசமான விருப்புரிமை என செக் நாட்டின் முன்னாள் ஜனாதி பதி வக்ளவ் கிளவுஸ் கூறியுள்ளார். போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கப் படுவதற்கு பதிலாக போரை நீட்டிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படு வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புடின் உக்ரைனை சிதைக்காமல் விடுவதாக தெரியவில்லை எனவும் எனவே புடினுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் இத்தாலி யின் பிரதமர் கூறியுள்ளார்.