world

img

விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ஷிரிஷா பண்டாலா

விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக் என்னும் ஒரு தனியார் விண்வெளி நிறுவனமானது, சோதனை முயசியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான யூனிட்டி 22 ஜ அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தலைவரான  ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இக்குழுவில் ஆந்திர மாநிலம் குண்ட்டூரை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலாவும் உள்ளார். கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள ஷிரிஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபர் என்னும் பெருமையையும் சிரிஷா பெற்றுள்ளார்.

 

;