போப் ஆண்டவரை உதறும் உக்ரைன்
உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைன் மோசமான பாதிப்புகளை சந்தி த்துவரும் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற போப் பிரான்சிஸின் கோரிக்கையை உக் ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்துள் ளார். போரில் ஒரு தரப்பிற்கு நிலைமை மோச மாகும் நிலையில் ஒருவர் தைரியமாக வெள்ளைக் கொடி காட்ட வேண்டும் மற்றும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக ஜெர்மனியில் தொடரும் போராட்டம்
ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத் தின் மின்சார வாகன தொழிற் சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எலன் மஸ்க் நிறுவனத்தை மேலும் 170 ஏக்கர் விரிவாக்கம் செய்ய அரசு அனுமதி கொடுத்துள் ளது.அந்நிறுவனம் நிலம்,நிலத்தடி நீர் மற்றும் வனப்பரப்பை ஒட்ட சுரண்டி வரும் நிலையில் இவ்வனுமதி சுற்றுச்சூழலுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மங்கோலியாவில் கடும் பனிப்புயல் 39 லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு
மங்கோலியாவில் கடுமையான குளிர் மற்றும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 39 லட்சம் கால் நடைகள் உயிரிழந்துள்ளது. இதனை அந்நாட்டு அரசு அமைத்துள்ள பேரிடர் கால கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.2023ஆம் ஆண்டு முதல் மங்கோலியா கடும் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.அந் நாட்டின் 80 சதவீத நிலப்பரப்பு பனியால் மூடப் பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கனமழை: பலி எண்ணிக்கை உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கன மழை திடீர் வெள்ளத்தில் பலியான வர்கள் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள் ளது. 10 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மலையோர கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியும் வெள்ளத் தில் அடித்து செல்லப்பட்டும் இவர்கள் மரணம டைந்துள்ளனர். மேலும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின 600க்கும் மேற்பட்ட வீடுகள்,விவசாய நிலங்கள் கடு மையாக சேதமடைந்துள்ளன.
ஹைட்டியில் உள்நாட்டுப் போர் சூழல்
ஹைட்டி நாட்டில் ஆயுத கும்பல் கள் நடத்தி வரும் தாக்கு தல்களால் உள்நாட்டு போர் சூழல் ஏற்பட்டுள் ளது. விமான நிலையங்கள், காவல் நிலை யங்கள், சிறைகள் மீது நடந்த தாக்குத லில் நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி விட்டனர். வன்முறைகளால் ஆயிரக்கணக் கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வரு கின்றனர். தற்போது அந்நாடு அவசர நிலையை அறிவித்து வன்முறைகளை கட்டுக் குள் கொண்டுவர முயல்கிறது.