world

img

ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். 
நீரஜ் சோப்ரா உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;