world

img

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்

சமூக வலைத்தளங்கள் மூலமாsக கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

'138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' எனப் பெயரிடப்பட்ட ஆய்வு, சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்துப் பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா எனக் கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இணைந்து, குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரவும் 18.07 சதவீத  பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும், இணையம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும்,  சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இவ்வாறு நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

;