world

img

‘போரை துவங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்’

பெய்ரூட், ஜூன் 20- லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை மீது தாக்கு தல் நடத்தும் முழு அளவி லான “போர்ச் செயல் திட்டங்க ளுக்கு” இஸ்ரேல் ராணுவம் ஒப்புதல் அளித்த பிறகு இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடுமையாக எச்ச ரித்துள்ளார்.  லெபனான் - இஸ்ரேல் எல்லையான  வடக்கு பிராந்தி யத்தின் தளபதி ஓரி கோர்டின், செயல்திட்ட இயக்குநரகத்தின் தலைவர் ஓடிட் பாசியுக் ஆகி யோர் லெபனானுக்குள் சென்று ஹிஸ்புல்லா படை மீது தரை வழித்தாக்குதல் நடத்தும்  திட்டங்களுக்கு ஒப்பு தல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்தே ஹிஸ் புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லா நேரலையில் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.  லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரை திணித்தால் இஸ்ரேலில் உள்ள ஒரு இடம் கூட எங்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர் எச்சரிக்கையையும் மீறி நீங்கள் போரை துவங் கினால் நாங்கள் “விதிமுறை கள், உச்சவரம்பு” ஆகிய எதை யும் கணக்கில் எடுத்துக்கொள் ளாமல் உங்கள் மீது தாக்கு தல் நடத்துவோம்.  இந்த தாக்குதல் இஸ் ரேல் மீது மட்டும் அல்ல தொ டர்ந்து தங்கள் விமான நிலை யங்களையும், ராணுவத் தளங்களையும் இஸ்ரேலின் ராணுவ பயிற்சிக்காக பயன் படுத்த அனுமதிப்பதற்காக சைப்ரஸ் நாட்டிற்கும் ஹிஸ் புல்லா  பதிலடி கொடுக்கும் என வும் எச்சரிக்கை விடுத்துள் ளார். மேலும் லெபனான், ஏமன், இராக் ஆகிய நாடுகளு டன் ஏற்பட்டுள்ள போரை நிறுத்த விரும்பினால் காசா வின் மீதான போரை  இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.