இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்வதால் இந்தியாவில் கொரொனா உயிழப்பு குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கை வெளியீடு.
ICMR முன்னாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலைமையில் சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் ஆய்வறிக்கையை ICMR வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனால் அந்த நாடுகளில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது.
தினமும் இட்லி உட்கொள்வது நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிப்பது, 2.5 கிராம் அளவுக்கு உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது, உள்ளிட்ட காரணாங்களால் இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ICMR அறிக்கை தெரிவித்துள்ளது.