ஐந்து நாடுகள் கூட்டறிக்கை மாஸ்கோ, ஜன.4- அணு ஆயுதஙகள் இருக்கும் வரையில் அது பாதுகாப்புக் காகவும், படையெடுப்பைத் தடுக்கவும், போர் ஏற்படாமல் தவிர்க்கவுமே அவை பயன் படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் உறுதி அளித்துள்ளன. இது குறித்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை கூட்டு அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த அறிக்கையை ரஷ்யா தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த ஐந்து நாடுகள்தான் அதிகா ரப்பூர்வமான அணுஆயுத நாடுகள் என்றும் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்கான அணுசக்தி யைக் கூட பயன்படுத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் வற்புறுத்தி வரும் நிலையில்தான் இந்தக் கூட்டறிக்கை வெளியாகி யுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில், அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அணு ஆயுதங்கள் பயன் படுத்தப்படும் சூழல் உருவானால் கடும் விளைவுகள் ஏற்படும். அப்படிப்பட்ட போர் ஏற்படும் என்றால் அதனால் ஆயுதப் போட்டியும் உருவாகும். இவற்றைத் தடுப்பதே, எங்களின் தலையாய கடமை என்று தங்கள் கூட்டறிக்கையில் ஐந்து நாடு களும் உறுதியளித்துள்ளன. அந்த அறிக்கையில், “அணு ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டு வெற்றி பெற முடியாது. அத்தகைய போர் ஒருபோதும் நடக்கக்கூடாது. அணு ஆயுதங்கள் இந்த உலகில் இருக்கும்வரையில் அவை பாதுகாப்புக்காகவும், படையெ டுப்பைத் தடுக்கவும், போரைத் தவிர்க்கவும்தான் பயன்பட வேண்டும். இந்த அணு ஆயு தங்கள் மேலும் பரவுவது தடுக் கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதப்பரவல் தடை உடன்பாட்டில் உள்ள அம்சங்க ளுக்கு நாங்கள் எப்போதும் கட்டுப்பட்டு இருப்போம் என்று உறுதியளித்துள்ள ஐந்து நாடுகளும், அணுஆயுதங்களை ஒழித்தல் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட உடன்பாடுகளை உறுதியாக நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கும், உக்ரே னுக்கும் இடையிலான பிரச்சனை யில் நாங்கள் தலையிடுவோம் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்நிலை யில்தான் அமெரிக்கா கையெ ழுத்திட்டுள்ள இத்தகைய கூட்ட றிக்கையை ரஷ்யா தனது இணையதளத்தில் வெளியிட்டி ருக்கிறது.