கார்டோம், பிப்.27- உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் உருவாகியுள்ள உணவுப் பஞ்சத் தால் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான (2.5 கோடி) மக்கள் பஞ்சத்தில் சிக்கி யுள்ளனர். 38 லட்சம் குழந்தைகள் உட்பட 1.8 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரி ழப்புகள் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அந்நாட்டின் ஜம்ஜம் உள்நாட்டு அகதிகள் முகாமில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அம்முகாமில் நாள்தோறும் 10 க்கும் அதிகமான குழந்தை கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பசியால் பலியாகி வருகின்றன என அகதிகளுக்கான பொது ஒருங்கிணைப்பு செய்தித் தொடர்பாளர் ஆடம் ரோஜால் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக ஊட்டச்சத்துக் குறை பாடு ஏற்பட்டு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பலவீனமடைந்துள்ளனர். அவர்க ளுக்கு எந்த ஒரு அவசர கால மருத்துவ வசதி யும் கிடைக்காமல் தினசரி இறந்து கொண்டி ருக்கிறார்கள் எனவும் ஆடம் கூறியுள்ளார். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மதிப்பீட்டின்படி முகாம்களில் உள்ள குழந்தை களில் நான்கில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். அவசர கால மருத்துவ உதவி இல்லாத நிலை தொடர்ந்தால் ஒரு வாரத்திற்குள் அதில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இறந்துவிடும் என தெரிவித்துள்ளனர். 2023 ஏப்ரல் மாதம் சூடான் ஆயுதப் படை கள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகளுக்கு இடையே போர் துவங்கும் முன்பு வரை ஐ.நா உலக உணவுத் திட்டம் அடிப்படையில் சூடான் மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகள் கிடைத்து வந்தன. இந்த படைகளுக்கு இடையே நடை பெறும் அதிகாரப்போட்டியின் காரணமாக போர் வெடித்து உள்நாட்டுப் போராக மாறிய பிறகு அந்த உதவிகள் அனைத்தும் நிறுத்தப் பட்டன. உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல பாதுகாப்பான பாதைகள் எதுவும் இல்லாத சூழலில் ஐ.நா அமைப்புகளால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை மக்களிடையே கொண்டு சேர்க்க இயலவில்லை. மேலும் சூடானில் உள்ள ஐ.நா உணவுக் கிடங்குகளை விரைவு ஆதர வுப் படைகள் கொள்ளையடித்துச் சென்று விடு வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உணவு இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மலேரியா, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றாலும் முகாம்க ளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை கூட கொடுக்க முடியாத சூழல் மட்டுமே தற்போது உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.