world

img

மீண்டும் அச்சுறுத்த தொடங்கிய கொரோனா வைரஸ்

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா உள்பட பல நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் பிஎஃப்.7 திரிபு வைரஸ் இந்தியாவிலும் பரவியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதார த்துறை இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

மேலும், பிஎஃப் ஒமைக்ரான் திரிபு குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பாதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.