world

பொருளாதார அடாவடித்தனத்தை நிறுத்து!

பெய்ஜிங், டிச.27- தன்னிச்சையாக சீனா மீது அமெரிக் கா விதிக்கும் தடைகள் பொருளாதார ரீதி யான அடாவடித்தனம் என்று சீனா வர்ணித் துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உற் பத்தியாகும் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என்று கடந்த வாரம் அமெரிக்க செனட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பால் அந்தப் பொருட்கள் உற்பத்தியாகின்றன என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில்தான் தன்னிச்சையாக, தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெ ரிக்கா அடாவடித்தனமாக நடந்து கொள் கிறது என்று சீனா தனது கடுமையான அதி ருப்தியையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வர்த்தகத் துறை கருத்து தெரிவித்துள்ளது.

சின்ஜி யாங் பகுதியில் நடைபெறுவதாகச் சொல் லப்படுவது கொடூரமாக பொய்கள் என்றும் பொருளாதார ரீதியாக தனது அடாவடித்த னத்தை அமெரிக்கா காட்டுகிறது என்றும் கூறியுள்ள அந்தத்துறையின் செய்தித் தொ டர்பாளர் சாவோ லிஜியன், “உண்மை களைப் பற்றிக் கவலைப்படாமலும், அங்குள்ள நிலைமைக்கு மாறாகவும் வேண்டு மென்றே தவறான தகவல்களை அமெரிக்கா தருகிறது” என்று கூறியுள்ளார். இது குறித்துப்  பேசிய சீன வெளியுற வுத்துறை செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், “சர்வதேச சட்டம் மற்றும் சர்வ தேச உறவுகளின் அடிப்படை அம்சங்கள் ஆகியவற்றை அமெரிக்கா மீறுகிறது. அதோடு, சீனாவின் உள்நாட்டு விவகா ரங்களில் அப்பட்டமாகத் தலையிடுகிறது. ஒவ்வொரு அடியிலும் சீனாவைத் தடுத்து நிறுத்துவதே அமெரிக்காவின் முயற்சியா கும். சந்தைப் பொருளாதாரம் மற்றும் சர்வ தேச பொருளதார, வர்த்தக விதிகளையும் அவர் கள் மீறுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.  

தங்கள் தொழிற்சாலைகளில் கட்டா யப்படுத்தப்பட்ட உழைப்பு இல்லை என்று நிரூபித்தால் அவ்வாறு நிரூபிக்கும் நிறுவ னங்களிடமிருந்து பொருட்கள் வாங்க லாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. சீனாவில் இயங்கும் நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இத்தகைய அம்சங்களை அமெரிக்கா கொண்டு வருகிறது என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.  “சீன நிறுவனங்கள் பற்றிய குற்றச் சாட்டை நாங்கள் கண்டிக்கிறோம். அதை நிராகரிக்கிறோம். சீனாவில் இயங்கும் நிறு வனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப் போம்” என்று வென்பின் குறிப்பிட்டுள்ளார்.  தனது தவறை அமெரிக்கா உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.