world

img

படித்து பணத்தை வீணாக்க வேண்டாமாம்; அக்னிபாதை திட்டத்தில் சேரவாம்..!

பாட்னா, ஜூன் 21 - இந்திய ராணுவத்துக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் ‘அக்னிபாதை’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுக ளுக்கு மட்டும் பணி வழங்கப் படும். அதன்பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஓய்வூதியம் எதுவும் வழங்கப் படாது. மாறாக, 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒருமுறை பணப்பலனாக வழங்கப்படும்.  ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை மிச்சப்படுத்தும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் மிச்சமாகும் பணம் ஆயு தங்கள் வாங்குவதற்கு செல விடப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே வெளிப்படையாக கூறியுள்ளார். இதற்கு எதிராக நாடு முழு வதும் இளைஞர்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகள் மட்டும் பணி என் றால், அதன்பிறகு தங்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நேர்மையாக பதில் சொல்ல முடியாத விஜய் வர்க்கி யா, கிஷண் ரெட்டி போன்ற பாஜக தலைவர்கள், “4 ஆண்டு களுக்குப் பின் பணி முடித்து வெளியே வரும் ‘அக்னிபாதை’ வீரர்களை, பாஜக அலுவல கங்களில் செக்யூரிட்டியாக நியமிக்கத் தயார்” என்றும், “அக்னிபாதை வீரர்களுக்கு சல வைத் தொழில், முடி திருத்தம் தொழில்களை செய்வதற்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்” என்றும் அவமானப்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரி சையில், பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாக்கூரும் இணைந்துள்ளார். “’அக்னிபாதை’ திட்டத்தில் அரசே இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது” என்றும், ஆனால், “பயனில்லாத பட்டப் படிப்புக்களுக்காக மக்கள் பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றும் கூறியுள்ளார். “பல நாடுகளில் ராணுவத்திற்கு சேவையாற்று வது கட்டாயம் ஆக்கப்பட்டுள் ளது” என்று கூறியிருக்கும் அவர், ‘’தேசபக்திக்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் மட்டுமே ‘அக்னிபாதை’ திட்டத் திற்கு எதிராக பேச முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.