world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அனைத்து மின்னணு  சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்கப்படும் அனை த்து மின்னணு சாதனங்களும் ‘சி’ ரக சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதிகரி த்து வரும் மின்ன ணுக் கழிவுகள் கட் டுப்படுத்தும் நோக் கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மடிக் கணினி உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் 2026 ஏப்ரல் 28 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை ஏற்க மறுத்து வருகிறது.

இஸ்ரேல் பிரதமருக்கு  அறுவைச் சிகிச்சை 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவச் சோதனைக்குப் பிறகு அவருக்கு சிறு நீர்த் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட் டது. இதையடுத்து நேதன்யாகுவுக்கு புரோஸ்டேட் நீக்க அறு வைச் சிகிச்சை செய் யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது. அறுவைச் சிகிச் சைக்காக  பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  நீதி துறை அமைச்சர் யாரிவ் லிவின் தற்காலிக பிரத மராக பணியாற்றுவார் என நேதன்யாகுவின் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

எச்.1 பி விசா திட்டத்திற்கு  டிரம்ப் ஆதரவு 

எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப் அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம் கிருஷ்ணனை செயற்கை நுண்ணறிவு துறையின்(ஏஐ) ஆலோசகராக டிரம்ப் நியமித்தார். இதற்கு வலதுசாரிகள் எதிர் ப்பு தெரிவித்தனர். இந் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா மற்றும் பல நிறுவனங்களை உரு வாக்கி அமெரிக்காவை வலுப்படுத்த முக்கிய மான காரணம் எச்.1பி விசா. இந்த எச்1பி திட்டத்தை பாதுகாக்க நான் போருக்குச் செல்லக் கூட தயார் என்று எலான் மஸ்க்   பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விசாவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.

கமால் அத்வான் மருத்துவமனைக்கு  தீ வைத்தது இஸ்ரேல் ராணுவம் 

காசாவில் இயங்கி வந்த கமால் அத்வான் மருத்துவமனைக்கு இஸ்ரேல் ராணுவம் தீ வைத்துள்ளது. பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளி களின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வல மாக இழுத்து சென்று சிறைப் பிடி த்துள்ளது. இந்த தீ வைப்பு மற்றும் தாக்குதலில் 5 மருத்துவர்கள் 50 பொது மக்களை இஸ்ரேல் படுகொலை செய்தது.கடந்த சில வாரங்களாகவே இஸ்ரேல் ராணுவம் கமால் அத்வான்  உள்ளிட்ட பல மருத்துவமனைகளை குண்டு  வீசி தாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையங்களை ராணுவமயமாக்க  பாக். மாணவர் சங்கம் எதிர்ப்பு

பாக். முற்போக்கு மாணவர் சங்கம் (PRSF) கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர் செயல் மாநாட்டை நடத்தியுள்ளது. மாணவர்களின் அடிப்படை உரிமை கள், மாணவர் பேரவை தேர்தல், அனைவ ருக்கும் கல்வி,  கல் விக்கான நிதியை அதிகரிப்பதை உறுதி செய்ய வேண் டும் எனவும் கல்வி நிலையங்களை ராணுவமயமாக்குவதற்கு எதிராக கிளர்ச்சிப் போராட் டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர். சர்வ தேச நாணய நிதியம் திணிக்கும் கல்வி தனியார்மயத் திற்கு எதிராகப் போராடவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.