பனிச்சறுக்கு மலையேற்றத்தில் மிகவும் பிரபலமான பெண் வீரர் ஹிலாரீ நெல்சன் தவறி விழுந்து காணாமல் போயிருக்கிறார். உலகின் பல மலைகளில் கடுமையான சூழல்களை மீறி ஏறி சாதனை படைத்த இவர், இமயமலையில் உள்ள மனாஸ்லு என்ற உலகிலேயே எட்டாவது உயரமான மலையில் ஏறிவிட்டு இறங்கிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.