வாஷிங்டன், டிச.26- ‘சாண்டாகிளாஸ்’ என்று அழைக்கப் படும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை அமெ ரிக்காவில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் காண முடியவில்லை. அமெரிக்கா முழுவதும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வித்தியாசமாக அமைந்திருந்தது. குறைவான எண்ணிக்கை யிலேயே கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தெருக் களில் மக்களை வாழ்த்தினார்கள். சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மால்கள் மூடப்பட்டதும் மற்றொரு காரணம். அமெரிக்காவில் சாண்டாஸ்களுக்கான சர்வதேச சகோதரத்துவ அமைப்பு (ஐபி ஆர்பிஎஸ்) இந்த ஆண்டில் மட்டும் 55 கிறிஸ்து மஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டீபன் அர்னால்டு கூறியதாவது: கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பொதுவாக குண்டான மனிதர்கள்.அவர்களில் பெரும் பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்ச னையால் அவதிப்படுபவர்கள். மேலும், சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது. அதனு டன் இதய நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல உடல் உபாதைகள் உள்ளன. இந்த அமைப்பை சார்ந்த சுமார் 1,900 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகினர் என்றும் ஆரோக்கிய குறைபாடு அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், கொரோனா காரணமாக தாத்தாக் கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வயது முதிர்வு காரணமாக சில கிறிஸ்துமஸ் தாத்தாக் கள் உயிரிழந்துள்ளனர். ‘சாண்டாஸ் கடைசி ரைடின்’ நிறுவனர் கார்லோ கிளெம் கூறுகையில், எனக்கு தெரிந்த வரை இந்த ஆண்டில் மட்டும் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள் ளார்.