world

img

காலத்தை வென்றவர்கள் : விஞ்ஞானி வோல்ட்டா பிறந்தநாள்...

இத்தாலிய இயற்பியல் விஞ்ஞானி வோல்டா இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ல் பிறந்தார். மின் ஆற்றல் மற்றும் மின் விசையைப்பற்றி ஆய்வு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருந்தார்.இவ்வார்வத்தின் காரணமாகவே இவர் இலத்தீன் மொழியில் தம் மின் கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். இன்று அன்றாடம் பேச்சு வழக்கில் கூறப்படும் 110 வோல்ட் மின் அழுத்தம், 230 வோல்ட் மின் அழுத்தம், என்பதில் உள்ள வோல்ட் என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும், நினைவு கூரவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட் மீட்டர் (Voltmeter) என்று அழைக்கின்றோம். மின்னழுத்தம் வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப் பெறும்.இவர் 1774ல் அரசு கல்விக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். 1775ல் மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776-77களில் வாயுக்களின் வேதியல் பண்புகளை ஆய்ந்துகொண்டு இருந்தபோது, மீத்தேன் என்னும்ஒரு வாயுவைக் கண்டுபிடித்தார். இது எரியக் கூடிய வாயு. இவ்வாயு ஒரு கரிம அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களும் சேர்ந்தகூட்டணுக்களாலான ஓர் அடிப்படையான ஒரு வாயு.1800ல் இவருக்கும் லூயிகி கால்வானி என்னும் இன்னுமொரு பெரிய மின் அறிஞருக்கும் இடையே அறிவியல் சார்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. கால்வானியின் கருத்துக்கு மாறாக, இவர் மின்கல அடுக்கு ஒன்றை செய்து காட்டினார். இதன்வழி தொடர்ந்து மின்னோட்டம் இருப்பதைக் காட்டினார். இவர் 1827ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் மறைந்தார்.

;