world

img

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே நேற்று முன்தினம் அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த படகில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 60 க்கும் மேற்பட்டோர்   பயணம் செய்த நிலையில், லம்பேடுசா தீவிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகு சென்றுகொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு  கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இத்தாலி கடலோர காவல் படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு கர்ப்பிணி உட்பட 4 பெண்களும், 3 ஆண்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 46 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், இந்த விபத்தில்  9 பேர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

;