world

img

வருமான பற்றாக்குறையால் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் இங்கிலாந்து மக்கள்

லண்டன்.பிப்.15- இங்கிலாந்து நாட்டில் குறைந்த வரு மானம் பெறும் பட்டியலில் உள்ள குடும் பங்கள் 4,68,944 ரூபாய் வருமான பற் றாக்குறையால் ( 4,500 பவுண்டுகள்)  வாழ்வாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவன சிந்தனைக் குழு  அறிக்கை தெரிவித்துள்ளது. எரிசக்தி, உணவு மற்றும் பிற அடிப்ப டைத் தேவைகளுக்கான செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 அந்நாட்டில் வறுமைக் கோட்டில் உள்ள மக்களில்  50 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களிடம் பணவீக்க அளவை  கணக்கிட்ட போது 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை கொடுக்க வில்லை என்றும் 2027 ஆம் ஆண்டு வரை மக்களின் நிலை கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும் பாது என்றும் அவ்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது .

 உக்ரைன் - ரஷ்யா போர் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் ஆகியவை  உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கம் ஆகியவை இங்கிலாந்து நாட்டின்  பணவீக்கத்திற்கு காரணமாக உள்ளது.  எனினும் இந்த இரண்டு போர்களும் தொடர்ந்து நடக்க இங்கிலாந்து அரசு தொடர் ஆயுத உதவிகளையும் செய்கிறது.

 அந்நாட்டு உழைக்கும் மக்கள் குறிப் பாக வறுமைக் கோட்டில் உள்ளவர்கள் எரிசக்தி ஆற்றல், உணவு மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றுக்காக தங்கள் வரு மானத்தில் பெரும் பகுதியை செலவு செய் கின்றனர். இது வசதி படைத்தவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களை விட அதிகம். எனினும் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய அது போ துமான அளவில் இல்லாததால் வறுமை தீர்க்க முடியாத அதிர்வலையாக உள்ளது.  

பணக்காரர்களுக்கும் வறு மைக் கோட்டில் உள்ளவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை மறைக்க ரிஷிசுனக் தலைமையிலான இங்கிலாந்து அரசு முயற்சித்தாலும் அது அம்பலப்படுகி றது என இந்த அறிக்கை குறித்து பொ ருளாதார அறிஞர்கள் தெரிவித்துள் ளனர்.  தற்போதைய நிலையில் மக்களின் வறுமையை நீக்கி வளர்ச்சியை மீட்டெ டுக்க வேண்டுமானால், பொது மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண் டிய அவசியத் தேவை உள்ளது.ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.