world

img

காலத்தை வென்றவர்கள் : மகாகவி ஷெல்லி பிறந்த நாள்...

பெர்சி புஸ்ஸி ஷெல்லி 1792 ஆகஸ்ட்4ல், இங்கிலாந்தில் பிறந்த ஒருஆங்கிலக் கவிஞர். பி.பி. ஷெல்லி என்றும்இவர் அழைக்கப்படுகிறார்.புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர்ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். ஷெல்லியின் அசாத்திய கொள்கைப் பிடிப்பும், தனித்துவவாழ்க்கை முறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழைஅடையவிடாமல் தடுத்தன. அவருடைய படைப்புகள் பலமுறைபுறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை. ஓசிமாண்டியாஸ், ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், டூ எ ஸ்கைலார்க், தி மாஸ்க் ஆஃப் அனார்க்கி அஃப் அனார்க்கி போன்ற தனிக்கவிதைகள் ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆங்கிலக் கவிதையுலகில் அழியாப்புகழ் பெற்றிருக்கும்இவை, இன்று வரை செவ்வியல் கவிதைத்தொகுப்புகளில்இடம் பெறுகின்றன. 

இவற்றைத் தவிர அடோனாய்ஸ், குயின் மாப், அலாஸ்டர்,ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம், தி டிரிம்ப்ஆஃப் லைஃப் போன்ற புகழ்பெற்ற நெடுங்க விதைகளையும், தி சென்சி, புரோமீத்தியஸ் அன்பவுண்ட் போன்ற மேடை நாடகங்களையும் ஷெல்லி எழுதி
யுள்ளார். முப்பதாண்டுகளே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான்குதலைமுறைகளாக பல கவிஞர்கள் ஷெல்லியின் படைப்புகளால்உந்தப்பட்டு கவிதைகளை எழுதினர். அவரது வன்முறையற்ற
போராட்ட முறைகள் ஹென்றி டேவிட் தூரோவின் சட்டமறுப்புக் கொள்கைக்கும் மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும் முன்னோடியாக  இருந்தது.

- பெரணமல்லூர் சேகரன்

;