கிரேட் பிரிட்டனில் பல்வேறு துறைகளில் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ரயில்வே தொழிலாளர்கள், 70000 பல்கலைக்கழக மாணவத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார் கள். கடந்த மாதம் தேசிய மருத்துவ சேவை தொழிலாளர்களிடையே வேலை நிறுத்த முடிவு மேற்கொள்வது குறித்து வாக்கெடுப்புகள் நடத்தப் பட்டன. ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் டிரைவர்கள், செவிலியர், சுகாதார ஊழியர்கள் போன்றோர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். வேலை நிறுத்தம் செய்வது தவிர்க்க முடியாது என்ற வகையில் வாக் கெடுப்பு முடிவுகள் அமைந்தன. டிசம்பர் 15 மற்றும் 20ல் செவி லியர், நர்சுகள் வேலை நிறுத்தம் துவங்கி யுள்ளது. தேசிய மருத்துவ சேவைத் தொழிலாளர்கள், வேலை நிறுத்த முடிவு எடுப்பதற்கான ஒரு காரணம், நிர்வாகம் அறிவிக்கும் ஊதிய உயர்வு மிக மிகக் குறைவானது;
இரண்டாவது காரணம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது. நர்சுகள் பணியிடம் மட்டுமே 47 ஆயிரம் காலியாக உள்ளன. தற்போது ஆட்சி புரியும் பழமைவாதக் கட்சியும் சரி, கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த தொழிலாளர் கட்சியும் சரி, இரண்டுமே சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. வரலாறு காணாத வகையில் பணவீக்கம் 10% ஆக உயர்ந்துள்ளது. தொழி லாளி வர்க்கத்தின் வாழ்நிலை 2008 -10 காலத்தில் இருந்த நெருக்கடி யான நிலைக்கு தாழ்ந்துள்ளது. கடந்த வாரம் 200 பேர் கிரேட் பிரிட்டனில் இறந்ததற்கு பிரதான காரணம், அவசர சிகிச்சை மேற்கொள்வதில் ஏற்பட்ட காலதாமதமே. ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர சேவைகள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டன. தேசிய மருத்துவ சேவை திறம்பட செயல்படுவதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய தவறிவிட்டது. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் சுகாதாரத்திற்காக, மருத்துவத்திற்காக அரசு ஒதுக்கும் நிதி குறைந்து வருகிறது. மேல் தட்டு மக்கள், நவீன தாராளமயக் கொள்கைகளால் ஆதாயம் அடைந்தாலும், அவற்றின் பலன்கள் கீழே கசிந்து மற்றவருக்கும் சென்றடையும் என்ற முதலாளித்துவ சித்தாந்தம் நடைமுறையில் தோல்வியுற்றுள்ளது. ஜனவரி மாதம் கிரேட் பிரிட்டன், அலை அலையான போராட்டங்களை காண உள்ளது.