world

img

சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்  

கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் நீர் எதிர்ப்பு நிலை கொண்டது என்று தவறான தகவல் தந்ததற்கு சாம்சங் நிறுவனத்திற்கு 9.55 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சாம்சங் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் தயாரிப்புகளில் ஒன்றான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்தது. அந்த மொபைல் போனை வாங்கியவர்கள் வாட்டர் ப்ருப் வேலை செய்யவில்லை என்றும் நீர் உள்ளே சென்றதும் மொபைல் போன் பழுதானது என்றும் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள நுகர்வோர் ஆணையம் விசாரணை செய்தது. விசாரணையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ப்ரூப் சரியாக வேலை செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதனையடுத்து, ஜூலை 201ல் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சாம்சங் நிறுவனம் தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதனால் சாம்சங் நிறுவனத்திற்கு 9.65 மில்லியன் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் வாட்டர் ப்ரூப் குறித்த புகார்களை சரிசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.