world

img

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆஸி. பிரதமர்.....

சிட்னி:
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போடும் பணியை ஆஸ்திரேலியா திங்களன்று முதல் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி,நம்பிக்கையூட்டும் வகையில், தடுப்பூசி போடுவது தொடங்குவதற்கு முன்பாக,பிப்ரவரி 21, ஞாற்றுக்கிழமைஅந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின்முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர்கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிலர் கலந்துகொண்ட இந்த  நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, தடுப்பூசி பாதுகாப்பானது, முக்கியமானது என்பதையும் அதை கொரோனாவை முன்களத்தில் எதிர்த்து நின்று போராடுபவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் முதலில் அளிக்கவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.இதையடுத்து, ஆஸ்திரேலியாவிலேயே முதலாவதாக 85 வயதான ஜேன் மாலிசியாக் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியே அடுத்த சில வாரங்களுக்கு பொது மக்களுக்குசெலுத்தப்படவுள்ளது.

;