world

img

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலி

நைஜீரியாவில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்கள் ஆள்கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று வட மேற்கு மாகாணமான கதுனாவைச் சேர்ந்த மடாமி கிராமத்தில் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;