பெரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரு நாட்டில், தலைநகர் லிமாவிற்கு அருகில் காஜாமார்க்கில்லா என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அப்போது ஒரு இடத்தில் மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட இந்த 14 மம்மிகளில் 6 குழந்தைகள், 2 பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் பாரம்பரியம் படி, இறந்தவர்கள் வாழ்க்கை அதோடு முடிவது கிடையாது. அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடங்குவார்கள் என்றும் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். இதனால், இறந்தவர்களின் உடலை எரிக்காமலும், புதைக்காமலும் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்டு களிமண் பானை உள்ளிட்டவற்றுக்குள் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு வருகிறது.