world

img

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 8 பேர் பலி 

மொஹாதிஸீ :  கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் . 

சோமாலியா தலைநகர் மொஹாதிஸீவில் அதிபர் மாளிகை நுழைவு வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சோதனை சாவடியில் , வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனம் , வழியில் சென்ற கார்கள் , லாரிகள் மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் .மேலும் , இந்த தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-சபாப் என்ற பயங்கரவாதக்குழு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது . இந்நிலையில் , தலைநகரில் இந்த குழு அடிக்கடி இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் . 

 

;