world

img

20 ஆண்டுகள் நாசமாக்கிய பின் வெளியேறுகிறது அமெ. படை.... மீண்டும் தலிபான்களிடம் சிக்குகிறதா ஆப்கானிஸ்தான்?

காபூல்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவப் படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் தலிபன்கள் புதியபுதிய பகுதிகளை அரசாங்கப் படைகளிடம் இருந்து பறித்துக்கொண்டிருக்கிறார்கள் என பரபரப்புச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

ஆப்கானிஸ்தானை இரான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் எல்லைப் புறங்களை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரான் அருகே உள்ள இஸ்லாம் குவாலா, துர்க்மெனிஸ்தான் அருகேஉள்ள தொர்கண்டி ஆகிய எல்லையோரநகரங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபன்களும் கூறுகின்றனர்.இஸ்லாம் குவாலா எல்லைப் பகுதிஆப்கானிஸ்தான் - ஈரான் இடையிலானமிகப் பெரிய வணிக நுழைவாயில் ஆகும். இந்த எல்லை வழியாக நடைபெறும் வணிகத்தின் மூலம் ஆப்கன் அரசுக்கு மாதம் 2 கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான வருமானம் வரும். அதைப் போலவே தொர்கண்டி நகரம், துர்க் மேனிஸ்தான் உடனான வணிக நுழைவாயிலாக உள்ளது.இந்த இரு எல்லைப்புற நகரங்களையும் மீண்டும் கைப்பற்ற ஆப்கன் படைகள் முயற்சி செய்துவருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியான் கூறியுள்ளார்.

“எல்லைப் பாதுகாப்பு அலகுகள் உள்பட அனைத்து ஆப்கன் பாதுகாப்புப் படைகளும் அங்கே உள்ளன. அப்பகுதிகளை மீட்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன,” என்று அவர் ஏ.எப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.இஸ்லாம் குவாலா எல்லைப்பகுதி தங்கள் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர்ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள் ளார்.ஹெராட் மாகாணத்தில் 5 மாவட் டங்களை மோதல் இல்லாமலேயே தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதனிடையே எல்லைப் பகுதியில் உள்ள சுங்க அலுவலகம் ஒன்றின் கூரையில் இருந்து ஆப்கானிஸ்தான் கொடியை தலிபான்கள் இறக்குவதைப் போலத் தெரியும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக தலிபான்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதை அரசாங்கம் மறுத்துள்ளது. 400 மாவட்டங்களில் மூன்றில் ஒருபங்கை தலிபான்கள் தங்கள் கட்டுப் பாட்டுக்கொண்டு வந்துவிட்டதாக பிறமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின்மேற்குப் பகுதியில் ஈரான் எல்லைப் புறத்தில் தொடங்கி, நாட்டின் மறுபுறத் தில் சீன எல்லைப் புறம் வரை ஒரு வளைகோடு போல இந்த தலிபான் கட்டுப்பாட்டு பகுதி பரவியிருப்பதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயல்பாடுகளின் மையமாக விளங்கியது பரந்து விரிந்த பாக்ரம் விமான தளம்.இந்த வாரத் தொடக்கத்தில் அரசாங்கத்திடம்கூட சொல்லிக்கொள்ளாமல் இந்த தளத்தை அவசர அவசரமாககாலி செய்துவிட்டுக் கிளம்பினர் அமெரிக்கப் படையினர். ஒரு காலத்தில் இந்ததளத்தில் பல பத்தாயிரம் படையினர் முகாமிட்டிருந்தனர்.இந்த வாரத் தொடக்கத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தஜிகிஸ்தான் தப்பிஓடினர். இந்த நாடு ஆப்கானிஸ்தானுக்கு வட கிழக்கே அமைந்துள்ளது. தலிபான்கள் தங்களை நோக்கி முன்னேறி வந்த நிலையில் அவர்கள் தப்பித்து ஓடியதாக தகவல்கள் கூறுகின்றன.தலிபான் தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஆப்கன் ராணுவத்தால் முடியுமா?

இதனிடையே ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தை தலிபான்கள் கைப்பற்றிக்கொண்டதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்துத் தரப்பினரும்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சக்கரோவா தெரிவித்தார்.20 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெற தாம் எடுத்திட்ட முடிவைஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்திப் பேசிய சில மணி நேரத்தில் இந்த செய்தி வெளியானது.

“வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல், ஆப்கானிஸ்தானில் சண்டை போடுவதற்கு இன்னொரு தலைமுறை அமெரிக்கர்களை நான்அனுப்பமாட்டேன்,” என்று தெரிவித்தார்பைடன்.ஆப்கானிஸ்தானின் முழு பகுதியையும் கட்டுப்படுத்தும் சாத்தியம் ஆப்கானிஸ்தான் அராசங்கத்துக்கு இருக்காது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.தலிபான்கள் ஒரு 6 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிவிடுவார்கள் என்று சில அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுவதாக ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.எனினும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தலிபான்களை கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கனி கூறுகிறார். சில பகுதிகளில் தாங்கள் இழந்த பகுதிகளை ஆப்கன் படையினர் திரும்பக்கைப்பற்றிவிட்டதாகவும் தோன்றுகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள குவாலா - இ - நா என்ற நகரில் உள்ள அரசாங்க கட்டடங்களை அரசாங்கப் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது தொடங்கியுள்ள புதிய தாக்குதலில் தலிபான்கள் நுழைந்த முதல் பெரிய மாகாணத் தலைநகரம் இதுதான்.இதனிடையே, மூன்று விதமான நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் தோன்ற சாத்தியமுள்ளது என்று பிரிட்டன் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் நிக் கார்ட்டர் தெரிவித்தார். முதலாவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம், “எல்லா மாகாணத் தலைநகரங்களையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தனதுகட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள் ளக்கூடும்,” என்றார் அவர்.“நாடு பிளவுபட்டு, அரசாங்கம் கலகலத்துப் போகக்கூடும் என்பது இரண்டாவது சோகமான சாத்தியப்பாடு. தலிபான்கள் நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறார்கள். 1990களில் ஏற்பட்டதைப் போல பிறதேசிய இனத்தவரும், இனக்குழுவினரும் நாட்டின் பிற பகுதிகளை கட்டுப் படுத்தக்கூடும்,” என்று தெரிவித்தார் அவர்.“அரசியல் சமரசம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நடப்பது மூன்றாவது நம்பிக்கை அளிக்கும் சாத்தியப்பாடு.அமெரிக்க -நேட்டோ நடவடிக்கைகள்ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால், வெளிநாட்டுப் படைகளின் பெரும்பகுதி ஏற்கெனவே கிளம்பிவிட்டன,” என்றார் அவர்.

(பிபிசி விபரங்களுடன்)

;