ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 4.3 அளவில் பதிவாகி இருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிலிருந்து 316 கி.மீ. தெற்கில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான தேசங்கள் எதுவும் ஏற்படவில்லை என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.