world

img

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 11 பேர் பலி, 23 பேர் காயம்  

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நாட்டின் 90 சதவீத நிலப்பரப்பு பனி மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டதில் இறப்புகள் மற்றும் காயங்கள் தவிர நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும் ஹெல்மண்ட், நிம்ரோஸ், ஃபரா, நங்கர்ஹர். காந்தஹார், ஜாவ்ஜான், தகார் மற்றும் காபூல் போன்ற இடங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.  

அதனைதொடர்ந்து சமீபத்தில் பெய்த கடும் பனி மற்றும் பனிப்பொழிவால் பல நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டு காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கான விமானங்களும் தடைபட்டுள்ளன. 

;