world

ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கனின் மேற்கில் உள்ள ஹெராத் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அட்ரஷ்கான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் மற்றும் தோட்டங்களில் வெள்ளநீர் புகுந்தது. கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் அங்கிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

;