world

img

களையெடுக்கும் மெக்சிகோ தொழிலாளர்கள் வலதுசாரிகள் பிடியிலிருந்து சங்கங்கள் மீட்பு

மெக்சிகோ சிட்டி, மே 11- மெக்சிகோவில் தொழிற்சங்கங்களை தொழி லாளர்களின் நலன் காக்கும் தலைமையின்கீழ் கொண்டு வரும் பணியை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக வலதுசாரிகளின் பிடியில் மெக்சிகோவின் அரசு இருந்ததால், தொழிற்சங்கங்களை வலுக்கட்டாயமாகத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தார்கள். தொழி லாளர்களின் நலன்களை விட, தலைவர்களின் நலன்களே பிரதானமாக இருந்தது. தொழி லாளர்களின் ஊதியமோ உயராமல் அப்படியே இருந்து வந்தது. போராட்டங்கள் எதுவும் நடந்து  விடாமல் பார்த்துக் கொள்வதே தொழிற்சங்கத் தலைவர்களின் வேலையாகும். முதலாளிகளால் அவர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ளப் பட்டனர். வலதுசாரித் தலைமையைத் தொழிற்சங்கங் களில் இருந்து அகற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதான பணியில்லை என்று இடதுசாரித் தொழிற்சங்க ஊழியர்கள் கருதுகிறார்கள். தேசிய அளவிலான தொழிற்சங்கக் கூட்ட மைப்பிலும் வலதுசாரித் தலைமையே உள்ளது.  இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் இருந்தா லும், வலதுசாரிகளின் தலைமையிலான தொழிற் சங்கங்களே பரந்து விரிந்துள்ளன. அதனால் அந்தத் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

வாக்குப்பெட்டி திருட்டு

குட்இயர் டயர் தொழிற்சாலையில் நடந்த மோசடிகள் தொழிலாளர்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கின. கடந்த மாதத்தில் இந்தத் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில்  பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியம் எப்போதுமே குறைவாகவே இருந்தது. நிர்வாகம் சொன்ன இடத்தில் கையெழுத்திடுவதே தொழிற்சங்கத் தலைவர்களின் வேலையாக இருந்தது. நிர்வாகமும், வலதுசாரித் தலைவர் களும் அரசின் பாதுகாப்பில் இருந்தன. இந்நிலையில்தான் அந்த ஆலையில் தேர்தல் நடந்தது. வலதுசாரிகள் தலைமை யிலான மெக்சிகோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு டன் இணைந்த தொழிற்சங்கம் வெற்றி பெற்றதாக தொழிலாளர் துறை அறிவித்தது. வலது சாரிகளுக்கு 727 வாக்குகளும், அவர்களுக்கு எதிராக 140 வாக்குகளும் விழுந்ததாக அறிவித்த னர். இந்த மெக்சிகோ தொழிலாளர் கூட்டமைப் பானது பல ஆண்டுகளாக மெக்சிகோவை ஆட்சி செய்த வலதுசாரிகளின் தொழிற்சங்கப் பிரி வாகவே இருந்து வந்திருக்கிறது.

பெரும்பாலான தொழிலாளர்களின் ஊதியம், அருகில் உள்ள அமெரிக்காவில் கிடைக்கும் ஊதியத்தில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே கிடைத்து வந்திருக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் கிளைதான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால்,  தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குப் பெட்டியையே மாற்றி யிருக்கிறார்கள். வாக்குப் பெட்டி அகற்றப்பட்டது காமிராவிலும் பதிவாகியிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் நடந்த இந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்குப் பதிவு நிறைவு பெற்றவுடன், தொழிற்சங்க உறுப்பினர்களில் சிலர், நிறுவனத்தின் பாதுகாப்பு  ஊழியர்களுடன் இணைந்து வாக்குப் பெட்டி களை திருடியிருக்கிறார்கள் என்பது தெளிவா கிறது” என்று கூறப்பட்டுள்ளது. குட்இயர் ஆலையில் மீண்டும் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெற்றது. பழைய வலதுசாரி தலைவர்களைத் தூக்கி எறியும் வகையில் வாக்களித்திருக்கிறார்கள். இத்தகைய நிகழ்வு கள் மேலும் ஆலைகளில் நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் சங்கங்கள்  இருக்கப் போகின்றன என்றும், தொழிலாளர் களின் நலன்களுக்கு ஆதரவாக நிற்கும் வகை யில் அவை இருக்கும் என்றும் இடதுசாரித் தொழிற்சங்க ஊழியர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.