world

img

பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டது

துருக்கி-சிரியா : தொடரும் நிலநடுக்கங்கள்

அங்காரா/டமாஸ்கஸ், பிப்.7- பிப்.5 ஆம் தேதியன்று துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறைவதற்குள் மேலும் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரேநாளில் மூன்று முறை இந்த  நடுக்கங்கள் ஏற்பட்டதால், மீட்புப்பணி களும் பாதிக்கப்பட்டன. இந்த நடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.5 மற்றும் 6 என்ற அளவில்  இருந்தன. இவை பாதிப்புகளை அதி கப்படுத்தியதோடு,

உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. இந்நிலையில், பிப்.6 ஆம் தேதியன்று மேலும் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் நிலநடுக்கங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நான்காவது நிலநடுக்கத்தின் அளவு 5.6 ரிக்டர் அளவிலும், ஐந்தாவது  நிலநடுக்கம் 5.4 ஆகவும் இருந்திருக் கிறது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கங்களை சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலிலும் உணர முடிந்தது. லெபனான் மற்றும் இஸ்ரேலில் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரையில் செய்திகள் வெளியாக வில்லை. பேரிடர் மேலாண்மைக்குழு க்களை தயார் நிலையில் இருக்குமாறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் அதிகாரப்பூர்வ மாக வெளியாகியுள்ள விபரங்களின் படி, துருக்கியில் குறைந்தபட்சம் 3 ஆயிரத்து 419 பேரும், சிரியாவில் 1,602 பேரும் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று துருக்கி மற்றும் சிரியாவின் அரசு வட்டாரங்களில் இருந்து தக வல்கள் கிடைக்கின்றன. இதனால் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படா மல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையுடனும் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

மீட்புப்பணி உதவி

மீட்புப்பணி வீரர்கள் பல்வேறு  நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டு ள்ளனர். இந்தியாவில் இருந்து  இயற்கைப் பேரிடர் மேலாண்மைக் குழுவில் இருந்து 100 பேர் துருக்கிக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்களோடு சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்க்குழுக்களும் செல்கின்றன. பயிற்சி பெற்ற மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசியமான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இதேபோன்று, ஐரோப்பிய யூனியனில் 13 உறுப்பு நாடுகள் உதவி செய்வதற்கான ஒப்புதலைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து 100 பொறியியல் வல்லுநர்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள், ரஷ்யாவில் இருந்து இடிபாடுகளை அகற்றும் பணிக்காக 300 பயிற்சி பெற்ற வீரர்கள், இஸ்ரேலில் இருந்து 150 பொறியியல் வல்லுநர்கள், கிரீசில் இருந்து 21 மீட்புப்பணி வீரர்கள் மற்றும் ஐந்து மருத்துவர்கள், தென் கொரியாவில் இருந்து 60 மீட்புப்பணி வீரர்கள், பிரிட்டனில் இருந்து 76 மீட்புப்பணி வீரர்கள் மற்றும் சீனா, லெபனான், ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.

22 பெரிய நிலநடுக்கங்கள்

2000 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 22 பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இது 7 ரிக்டர் அளவில் இருந்தது. 2001 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பெரும் நிலநடுக்கத்திற்கு சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர்.