பெரு நாட்டில் ரிக்டர் அளவில் 7.5 பதிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான நிலநடுக்கம் என்றாலும் 112 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்டதால் பாதிப்புகள் அதிகம் இல்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.