world

img

அதிக விலையுயர்வு - சுணக்கமான உற்பத்தி

ரோம், டிச.22- 2023 ஆம் ஆண்டில் அதிகமான அளவில் விலையுயர்வும், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சுணக்கமும் காணப்படும் என்று இத்தாலி யின் பொருளாதார நிலை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1999 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய  நாடுகள் இணைந்து யூரோ நாணய மண்ட லத்தை உருவாக்கின. அதில் இத்தாலியும் இணைந்தது. அப்போதிருந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், 2022 ஆம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாகவே  அமைந்திருக்கிறது. குறிப்பாக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. 1999 ஆம்  ஆண்டுக்குப்பிறகு இப்போதுதான் இத்தகைய நெருக்கடி உருவாகியுள்ளது. கடந்த ஆண்டோடு இந்த இரண்டு மாதங்களையும் ஒப்பிட்டால், பொருட்களின் விலைகள் கடுமை யாக உயர்ந்துள்ளன. வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான கான்ஃப்கமர்சியோ, “வாங்கும் சக்தி பெருமள வில் குறைந்திருப்பதால் பொருட்களின் விலையுயர்வு குடும்பங்களைக் கடுமையாகப் பாதித்துவிட்டது. இந்த ஆண்டின் நிறைவில் நாட்டின் பணவீக்கம் 12 விழுக்காடாக உயர்ந்திருக்கும். கடந்த ஆண்டில் இது 11.8  விழுக்காடாக இருந்தது. கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு மீட்சிக்கான பணிகள் நடந்தன. 2023 ஆம் ஆண்டின் மத்தியில் அந்தப்  பணிகளை நிறுத்த வேண்டிய நிலைமை வரும்” என்று எச்சரித்துள்ளது.

அடுத்த ஆண்டிலும் பொருளாதார உயர்வு இருக்காது என்று கான்ஃப்கமர்சியோ கூறுகிறது. ஒருவேளை மீண்டும் பொருளாதார மீட்சி இருக்கும் என்றால்,  அது ஏழு காலாண்டு களுக்குப் பிறகுதான் நடக்கும் என்று அவர்களது ஆய்வு தெரிவிக்கிறது. இத்தனைக்கும்  தொழி லாளர் சந்தையும், குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் நன்றாகவே இருக்கின்றன. இதுவரையில் இல்லாத அளவி லான விலைவாசி உயர்வு இந்த உணர்வு களைக் காலி செய்து விடும் வகையில் அமை யும் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற்துறையில் உற்பத்தி குறைந்தாலும் சேவைத்துறையும், சுற்றுலாத்துறையும்தான் சரிவை ஓரளவு தாங்கிப் பிடிப்பவையாக இருக்கின்றன.  பிரிட்டன் அளவுக்கு இல்லை என்றாலும், இத்தாலியிலும் மக்கள் நெருக்கடிக்கு எதிராகப்  போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போ தைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நெருக்கடியை மேலும் இறுக்குகின்றன என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. 2023இல் போராட்டங்களும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

2021 ஆம் ஆண்டில், இத்தாலிப் பொருளா தாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள  உழைப்பாளிகளின் பங்களிப்பு முக்கியமானது என்று லியோனி மோரிசா என்ற தொண்டு நிறு வனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இத்தாலியின் உள்நாட்டு மொத்த உற்பத்தி யில் கடந்த ஆண்டில் மட்டும் அவர்களின் பங்களிப்பு 9 விழுக்காடு என்று அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக் கிறது. டாலரில் மதிப்பிட்டால், 14 ஆயிரத்து 800 கோடி டாலர் என்றளவில் இந்தப் பங்களிப்பு  உள்ளது.  2021 ஆம் ஆண்டில் மட்டும் வேலைக்கு வரு வதற்காக வழங்கப்பட்ட புதிய உரிமங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்பது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயம், உணவு விடுதிகள் மற்றும் கட்டுமானத்துறைகளில்தான் இந்தத் தொழிலாளர்கள் அதிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இத்தாலியில் 52 லட்சம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாவர். இவர்களில் 22 லட்சத்து 57 ஆயிரம் பேர் இந்தத் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள் என்று அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன.