world

img

மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் கணக்குகளுக்கு தடை விதிப்பு.... பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை...

நேபிடாவ்:
மியான்மரில் அராஜகமாக முறையில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைகைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களைவீட்டுச்சிறையில்வைத்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் ராணுவ ஆட்சிக்குஎதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தையை நிலைமையை அவசர நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளது. கொடிய வன்முறை போன்ற நிகழ்வுகளால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியாவடி டெலிவிஷன் சேனல், எம்.ஆர்.டி.வி. அரசு டி.வி. சேனல் இரண்டின் கணக்கையும் பேஸ்புக் முடக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தனது மற்றொரு தளமான இன்ஸ்டாகிராமிலும் ராணுவ கணக்குகளை பேஸ்புக் முடக்கியுள்ளது.

;