world

img

கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் இடங்கள்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை

ஏதென்ஸ், மே 23- கிரீஸ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், யாருக் கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஐந்து கட்சிகளுக்கு பிரதி நிதித்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆளுங்கட்சியான புதிய ஜனநாய கத்திற்கு 40.79 விழுக்காடு வாக்குகளுடன் 146 இடங்களும், இடதுசாரிக்கட்சிகளை ஒருங்கிணை த்து உருவான சிரிசாவுக்கு 20 விழுக்காடு வாக்கு களுடன் 71 இடங்களும், சோசலிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய பசோக் கூட்டணிக்கு 11.46 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளதால் 41 இடங்களும், 7.23 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 26 இடங்களும், வலது சாரிக் கட்சியான கிரீக் சொல்யூசன் 4.25 விழுக்காடு வாக்குகளோடு 16 இடங்களையும் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 158 இடங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி 12 இடங்களை இழந்துள்ளது. கடந்த முறை 86 இடங்களைப் பெற்றிருந்த சிரிசா தற்போது 15  இடங்களை இழந்து 71 இடங்களைப் பிடித்தி ருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன. பசோக் மற்றும் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் கூடுதல் வாக்குகளையும், அதன் அடிப்படையில் கூடுதல் இடங்களையும் பெற்றுள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளும் புதிய ஜனநாயகக் கட்சி பேசத் தொடங்கியுள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தனிப் பெரும் கட்சிக்கு  கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சட்டத்தில் இருக்கிறது. இதனால், மீண்டும் தேர்தல் நடத்தினால் தங்களால் பெரும் பான்மை பலத்தைப் பெற்று விட முடியும் என்று ஆளுங்கட்சி நம்புகிறது. அதோடு, இழப்பை சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரதான எதிர்க்கட்சியான சிரிசாவும் அதற்கு ஆதரவாக உள்ளது.

கடுமையான எதிர்ப்புகள் இருந்தும் ஆளும்கட்சிக்கு எப்படி இவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்ற வினாவுக்கு, “அரசின் கொள்கை களை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினார்கள். சில முடிவுகளை திரும்பப் பெறச் செய்யும் அள வுக்கு அந்தப் போராட்டங்கள் நடந்தன.  ஆனால், போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்தியதோடு நிறுத்திக் கொண்டார்கள். வாக்களிக்க அவர்கள் வர வில்லை. அதனால்தான் புதிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜோகோபோலஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  கம்யூனிஸ்டுகளுக்கு கூடுதல் இடங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட் டங்களில் பெரும் அளவில் பங்கேற்ற கிரீஸ் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு கடந்த முறையை விட 10  இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. இளை ஞர்களும், மாணவர்களும் வாக்குச்சாவடி களுக்கு வந்திருந்தால் பத்து விழுக்காடு வாக்கு களுக்கு அதிகமாக கம்யூனிஸ்டுக் கட்சிக்குக் கிடைத்திருக்கும். அரசுக்கு எதிரான ஆர்ப்பாட் டங்களை ஒருங்கிணைத்த கட்சி, வாக்குகளைச் சேகரிப்பதில் கூடுதல் கவனத்தை செலுத்தி யிருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆட்சியமைக்கும் வாய்ப்புகளை முதல் மூன்று பெரிய கட்சிகளுக்கும் ஜனாதிபதி காதரினா சாக்கெல்லாரோபோலஸ் தருவார். ஒவ்வொரு கட்சிக்கும் மூன்று நாட்கள் அவகாசம் கிடைக்கும். கூட்டணி ஆட்சியை அமைக்கப் பேச்சுவார்த்தை களை நடத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்துவார். இந்த மூன்று கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் இடைக்கால அமைச்சரவை அமைக்கப்படும். ஒரு மாதம் கழித்துப் புதிய தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணை யிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.