world

காணாமல் போன ஏரியை மீட்ட மங்கோலியா

உலான் படோர், ஜூன் 8- பல ஆண்டுகளுக்கு முன்பாக நீர் வரத்து இல்லாமல் வற்றிப் போய் ஏரி  இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போன ஏரியை மங்கோலிய நிர்வாகம் மீட்டெடுத்துள்ளது. தொடர்ந்து வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வரும் மங்கோலியப் பகுதி களில் பேரழிவு மேலாண்மை குறித்து  ஏராளமான பரிசோதனைகள் முயற்சிக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்கால தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உயிர்ச்சேதங்களைக் குறைக்க உதவினாலும், வெள்ள நீருக்கான வடிகால் வசதிகளை உருவாக்கு வதில் பின்னடைவுகள் ஏற்படுகின்றன. இந்த பரிசோதனைகளின் ஒருபகுதி யாகவே டார்காட் பள்ளத்தாக்குப் பகுதி களில் சில முயற்சிகளை மேற்கொண்டனர். அந்நாட்டின் முக்கிய ஆறான கோடோனில் அவ்வப்போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. 1971 ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெள்ளம் வந்து,  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிப்பு களைத் தாண்டி, அந்த ஆற்றின் பாதையே  மாறியது. பள்ளத்தாக்கில் இருந்த பல ஏரிகளுக்கு இந்த ஆற்று நீர்தான் வந்து கொண்டிருந்தது. பாதை மாறியதால் ஏராளமான ஏரிகள் மறைந்தன. இப்போது புதிய உத்திகளால் பழைய  ஏரிகளுக்கு கோடோன் ஆற்று நீர் செல்வதற்கான வழிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு மாகா ணத்தில் உள்ள குவ்ஸ்கல் என்ற இடத்தில் உள்ள ஏரி 50 ஆண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்ததோ, அந்த நிலையை மீண்டும் அடைந்திருக்கிறது. 403 மீட்டர் உயரமுள்ள ஒரு அணையும், இரண்டு கால்வாய்களும் கட்டப்பட்டு பல பகுதி களுக்கு தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.