world

img

மக்கள் ஆதரவை இழக்கும் இங்கிலாந்து மன்னர்

லண்டன், ஏப்.29- இங்கிலாந்தின் புதிய மன்னாராக சார்லஸ் பொறுப்பேற்க இருக்கையில், மன்னர் பதவி மிக முக்கியமானது என்று கருதி வந்த அந்நாட்டு மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்தபோது, அந்நாட்டு மக்களில் பெரும்பா லான மக்கள் அப்பதவி மிக முக்கியமானது என்று  கருதி வந்தனர். இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கும் அவரே ராணியாக இருந்தார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி அவர் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அவரது புதல்வர் சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. மே 6 ஆம் தேதி யன்று அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சமூக ஆய்வுக்கான தேசிய மையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மன்னர் பொறுப்பு என்பது மிக முக்கிய மானது என்று 29 விழுக்காட்டினர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். ஓரளவு முக்கியமா னது என்று 26 விழுக்காடும், முக்கியமானது அல்ல  என்று 20 விழுக்காடும், முக்கியமானதே அல்ல  

அல்லது ஒழித்து விடலாம் என்று 25 விழுக்காடும் கருத்து கூறியிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு மன்னர் பதவிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் சரிந்துள்ளது என்று இந்தக் கருத்துக் கணிப்பின் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. 1983 ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக மன்னர் பதவி குறித்து ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. மன்னர் குடும்பத்தின் அதிகாரம், அவர்களின் பணிகள் மற்றும் அவர்களுக்கான செலவுகள் ஆகியவை பற்றி அப்போதிலிருந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தொடக்க கட்டத்தில் மன்னர் பொறுப்பு பற்றிய எதிர்மறைக் கருத்து குறைவாகவே இருந்தது. ஆனால் நாட்கள் நகர, நகர மக்கள் மத்தியில் ஏராளமான கேள்விகள் எழத் தொடங்கின. புதிய தலைமுறை மத்தியில் மன்னர் பொறுப்பு அவசிய மில்லை என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் ராணியாகப் பொறுப்பேற்றதன் பவள விழா  கொண்டாடப்பட்டது. அப்போது, 35 விழுக்காட்டி னர் மன்னர் மற்றும் ராணி பதவிகள் மிக முக்கிய மானது என்று தெரிவித்தனர். 2012 ஆம் ஆண்டில் இருந்து சரிந்து வந்த மக்கள் ஆதரவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாகத் தெரிந்தது. ஆனால், தற்போது மீண்டும் அது 29 விழுக்கா டாகச் சரிந்துள்ளது. முக்கியமான விழாக்கள் நடக்கையில், மக்கள் உணர்வு மேலோங்க விடை யளிக்கிறார்கள் என்றும் அண்மையில் நடத்தப் பட்ட ஆய்வு கூறுகிறது.

முடிசூட்ட மக்கள் பணமா?

மன்னர் பொறுப்பு பற்றிய மக்கள் கருத்து ஒருபுறம் இருக்க, முடிசூட்டு விழாவுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலவு பண்ணுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரண்டு வாரங்க ளுக்கு முன்பாக நடத்தப்பட்ட யூகவ் மையத்தின் ஆய்வுப்படி, 51 விழுக்காட்டினர், மக்கள் பணத்தை முடிசூட்டு விழாவுக்கு செலவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இவர்களில் இளைஞர்கள்தான் பெரும்பாலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. முடிசூட்டு விழா நடக்கும் மே 6 ஆம் தேதி யன்று “மன்னர் பதவியை ஒழியுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பெருந்திரள் பேரணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரபால்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் பெரும்பாலா னவர்கள், மூன்றாம் சார்லசை மன்னராகவே ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். எதிர்ப்புப் பேரணிகளில் இளைஞர்களே ஏராளமான எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.