world

img

இந்திய கொரோனா பாதிப்பு உலகத்துக்கே எச்சரிக்கை.... யுனிசெப் அமைப்பு கருத்து....

நியூயார்க்:
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறுகையில், இந்தியாவின் சோகமான நிலைமை நம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். இப்போதுஉலகம் முன்வந்து, இந்தியாவுக்கு உதவா விட்டால், வைரஸ் தொடர்பான இறப்புகள் பிராந்தியத்திலும், உலகமெங்கும் எதிரொலிக்கும் என்றார்.

யுனிசெப் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா அட்ஜெய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பேரழிவைத்தடுக்க அரசுகள் தங்கள் அதிகாரத்துக்குள்ளான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம், தாமதமின்றி முன்வந்து உதவ வேண்டும்.தெற்காசியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகள், 11 ஆயிரம் தாய்மாரின் உயிர்கள் பறிபோய் உள்ளது. வைரஸ்களுக்கு எல்லை கிடையாது. நாம் உலக சமுதாயமாய் ஒன்றுபட்டு, இந்தபேரழிவை தடுத்து நிறுத்தி நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;