world

img

காலத்தை வென்றவர்கள் : ஹெலன் கெல்லர் நினைவு நாள்....

ஹெலன் கெல்லர் அமெரிக்காவில் 1880ஆம் ஆண்டு ஜுன் 27ஆம் நாள் பிறந்தார்.இவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல்காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும்திறன் ஆகியவற்றை இழந்தார். 1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லைச் சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். அங்கு ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகளைக் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள்மூலம் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ளப் பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர்.பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கான பிரெயிலி எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வையற்றோருக்கான பிரெயிலி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்தகெல்லர் 1904 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம்பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துஇளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும்பெற்றார்.  தன்னைப் போல மற்ற மாற்றுத் திறனாளிகளும் மீட்சி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார். கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின்உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும்நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரதுசேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன்,பாலி தாம்சன் ஆகியோரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

---பெரணமல்லூர் சேகரன்---

;