world

img

ஹைதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 2 பேர் பலி  

ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர்.  

தென்மேற்கு ஹைட்டியில் 5.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 200 கிமீ(124 மைல்) தொலைவில் உள்ள லெஸ் கேய்ஸ் நகரில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதனை தொடர்ந்து 4.4 மற்றும் 5.1 ரிக்டர் அளவில் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

;