world

img

அண்டார்டிகா பனிப்பாறையில் பெரும் விரிசல்....

புதுதில்லி:
அண்டார்டிகா பனிப்பாறையில் பெரும்விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து சூழலியல்ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காலநிலை மாற்றத்தால் உலக அளவில் பருவ நிலைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் கால நிலை மாற்றம் காரணமாக பனிப்பறைகள் உருகி வருகின்றன.இந்நிலையில் அண்டார்டிகாவில் மீண்டும் பனிப்பாறை ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்டார்டிகாவில் வெட்டல் பகுதியில் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைப்போல 20 மடங்கு அளவுள்ள பெரிய பனிப்பாறையில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூப்பது வருடங்களில் இம்மாதிரியாக மூன்று முறை பனிப்பாறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “ நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்து வது, பேரிடர்களுக்கான தயார்நிலை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;