world

img

கூகுள் நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பு....

வாஷிங்டன்:
உலகம் முழுவதும் பிரபலமான கூகுள் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்டஊழியர்கள் இணைந்து இந்த தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பானபுகார்களை முறையாக விசாரிப்ப தில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் மீது அதன் ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இதனையடுத்தே கூகுள் நிறுவனத்தில்பணிபுரியும் ஊழியர்கள் ஒன்றி ணைந்து ‘ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் சங்கத்தை அமைத்துள்ளனர்.  தொழிலாளர்களின் கோரிக்கைகளை குழுவாக பேசுவதற்காகவும் ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்கவும் இந்த தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தில் பணியாற்றும்ஊழியர்கள் நியாயமான ஊதியத்துடனும், துஷ்பிரயோகம் செய்யப்படுவோம்; பாகுபாடு காட்டப்படுவோம் என்ற பயமில்லாமலும் பணியாற்றுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டுள்ள தாக தொழிலாளர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு நிறுவனங்கள் அனுமதிக்காத நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவமானது.கூகுள் பொறியாளர்கள் பருல் கோவுல் மற்றும் செவிஷா ஆகியோர் இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவராக மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

;