world

img

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: முன்னாள் காவலருக்கு 22.5 ஆண்டு சிறை தண்டனை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் காவலருக்கு 22 ஆண்டுகள் 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்காவின் மினியாபோலீஸ் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர், டெரெக் சாவின் என்ற காவல் அதிகாரியால் கொடூரமான வகையில் கழுத்தை முழங்காலால் அழுத்தி  கொல்லப்பட்டார். கள்ள நோட்டு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரியான சாவின் அவ்வாறு தாக்கினார். ஆனால் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சியும் காவல் அதிகாரி காலை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இந்த கொலை குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
காவல் அதிகாரி இனவெறியுடன் நடந்து கொண்டதாக அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இதனிடையே காவல் அதிகாரி டெரிக் உள்ளிட்ட 4 பேர் மீது ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 22 வருடம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து மின்னசோட்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் சிறையில் கண்ணியமாக நடந்து கொண்டால் தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்த பின்னர் பரோல் வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

;