world

img

உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவுங்கள்.... பைடன் அரசுக்கு அமெரிக்க இந்தியர்கள் நெருக்கடி....

வாஷிங்டன்:
இந்தியாவில் கொரோனா தொற் றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உபரியாகஇருக்கும் தடுப்பூசிகளை அனுப்பி இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்2 ஆவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக் கும் மேல் மக்கள் தொற்றால் பாதிக் கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மக்கள் சந்தித்துவரும் இக்கட்டான சூழலைப் பார்த்து சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகள் உதவுவதாக ஆதரவு தெரிவித்துள்ளன.அமெரிக்க இந்தியரும் எம்.பி.யுமான ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்களுக்கு இந்த நேரத்தில் உதவி அவசியம். நம்முடைய சேமிப்புக் கிடங்குகளி்ல் அமைதியாக தடுப்பூசிகளை வைத்திருக்க முடியாது. அதை தேவையுள்ளவர்களுக்கு வழங்கி உயிரைக் காக்க வேண்டும். தற்போது அமெரிக்க இருப்பில் 4 கோடிஅஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் இருப்புஉள்ளன. இந்த தடுப்பூசியை உடனடியாக இந்தியா, அர்ஜெண்டினா உள் ளிட்ட தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் முன்வர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ப்ரூக்கிங் இன்ஸ்ட்டியூட்டைச் சேர்ந்த தான்வி மதன் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘இந்தியாவுக்கு உதவபாகிஸ்தான் பிரதமரும், ஈரான் பிரதமரும் முன்வந்துவிட்டார்கள். ரஷ்யா, சீனாவும் ஆதரவு வழங்கிவிட்டார்கள். அமெரிக்கா இதுவரை ஏதும் பேசவி்ல்லை. இனியும் பேசாமல் இருந்தால், கடந்த சில மாதங்களாக பெற்ற நற்பெயரை பைடன் நிர்வாகம் இழந்துவிடும்’’ எனத்தெரிவித்துள்ளார்.அமெரிக்க இந்தியரும், பைடன் பிரச்சாரக் குழுவில் இருந்த சோனல் ஷாடுவிட்டரில் கூறுகையில், ‘‘இந்தியாவில் கொரோனா பிரச்சனை இருப்பதுஉண்மைதான், மிகப்பெரிய மனிதநேயபிரச்சனையாக மாற உள்ளது. அதற்குள்அமெரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும், மற்ற நாடுகளுக்கும் இது பரவிவிடும்’’ எனத் தெரிவி்த்துள்ளார்.அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஆஷிஸ் கே ஜா, தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் “ இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின்சுகாதாரத்துறையே உருக்குலைத்துவிடும். உடனடியாக அமெரி்க்கா உதவவேண்டும். தேங்கிக்கிடக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வழங்க வேண்டும்’’ எனத் தெரிவி்த்துள்ளார்.

சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறுகையில், ‘‘இந்தியாவில் நிலவும்சூழலைப் பார்த்து ஆழ்ந்த வேதனையடைந்துள்ளேன். இந்தியாவில் உள்ள சூழல் வருத்தமாக இருக்கிறது’’ எனத்தெரிவித்துள்ளார்.

;