அரசு மற்றும் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு சிறிது கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் தற்போது அவரது ட்விட்டரில் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் செவ்வாயன்று ஒரு ட்விட் செய்துள்ளார்.
அதில் சாதாரண பயனாளர்களுக்கு ட்விட்டர் எப்போதுமே இலவசம்தான். ஆனால் அரசு சார்ந்து மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களிடமிருந்து சிறிது கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான முழு விவரங்களை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.