டெஹ்ரான், பிப்.18- அல் கொய்தா மற்றும் டேஷ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியதே அமெரிக்காதான் என்று ஈரான் குற்றம் சாட்டி யுள்ளது. அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒருவர் ஈரானில் இருப்பதாக அமெரிக்க நிர்வாகம் கூறியிருக்கிறது. அமெரிக்க அரசுச் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நெட் பிரைஸ் தனது டுவிட்டர் கணக்கில் இது குறித்துப் பதிவு செய்திருந்தார். செய்ப் அல் அடெல் என்ற அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஈரானில் இருப்பதாகவும், அவர்தான் அந்த அமைப்பின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார் என்றும் அந்தப் பதிவில் பிரைஸ் குறிப்பிட்டிருந்தார். இதற்கான ஆதாரங்கள் எதையும் பிரைஸ் பதிவு செய்யவில்லை. அவரது இந்தப் பதிவுக்கு ஈரான் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஈரான் வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிர் அப்துல்லாஹியான், அல் கொய்தாவின் புதிய தலைவர் ஈரானில் இருக்கிறார் என்பதைக் கடுமையாக மறுத்திருக்கிறார். இதுபோன்ற ஆதா ரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்றும் டுவிட்டர் மூலமாகப் பதிலளித்தி ருக்கிறார்.
அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது குற்றச்சாட்டை மீண்டும் கூறியிருக்கிறார். அல் கொய்தாவுக்குப் பாதுகாப்பான இடமாக ஈரான் மாறியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என்று குற்றம் சாட்டினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “ஒருவேளை அல் கொய்தாவின் புதிய தலைவர் ஈரானில் இருப்பது உறுதியானால் நீங்கள் என்ன நட வடிக்கை எடுப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரைஸ், “உலகின் எந்த மூலையிலும் இது போன்ற சவால்கள் எழுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து சமாளிப்போம்” என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அமெ ரிக்க உளவு அமைப்பான சிஐஏ நடத்திய தாக்கு தலில் அல் கொய்தாவின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். ஆளில்லா விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள குடியிருப்புப் பகுதி யில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் கொல்லப்பட்ட தாகத் தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக புதிய தலைவராக யார் தேர்வு செய்யப் பட்டார் என்று இதுவரையில் அல் கொய்தா அறி விக்கவில்லை.
“பயங்கரவாதத்தின் முகவரி”
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தந்த ஹூசைன் அமிர் அப்துல்லா ஹியான், “இன்று உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவியதற்கு அல் கொய்தாவை யும், டேஷ் அமைப்பையும் உருவாக்கியவர் கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அமெ ரிக்காதான் இந்தப் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது. இந்த அமைப்புகளுக்குத் தவறான முகவரியைத் தர வேண்டாம். எதற்கெடுத்தாலும் ஈரான் மீது பழிபோடும் வேலையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காக பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, பயிற்சி கொடுத்து மற்றும் ஆதரவினை அமெரிக்கா தெரிவித்து வருகிறது என்று பல்வேறு விபரங்கள் ஏற்கனவே வெளியாகி யுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் கெட்ட நோக்கத்தை மேற்கு ஆசிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி யிருக்கிறது. பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டியுள்ள ஈரான் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, “இந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா பெரும்பங்கு வகித்து வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.